ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் : துக்க தினம் அனுஷ்டிப்பு!

ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்று (24.03)  துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்யா முழுவதும் உள்ள தூதரங்களின் முன்பு தாக்குதலில் உயிர் நீத்தவர்ளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹாலில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 133 பேர் உயிரிழந்தனர். தாக்குதலின் போது தியேட்டருக்குள் 6,200 பேர் இருந்தனர்.

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யாவில் பதிவாகிய மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும், இதற்கு இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் நகர மண்டபத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது எப்படி என்பதை காட்டும் வீடியோவையும் ஐஎஸ் பின்னர் வெளியிட்டது.

தியேட்டருக்குள் துப்பாக்கியால் சுட்ட 4 பேர் உட்பட 11 பேர் இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 140ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்ய ரஷ்ய மக்கள் வரிசையில் நின்றதை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

சந்தேக நபர்கள் உக்ரைன் நோக்கி தப்பிச் செல்வதை வெளிப்படுத்திய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாட்டின் தேசிய துக்க நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தாக்குதலில் இறந்தவர்களுக்கு நினைவாக ரஷ்யா முழுவதும் நினைவேந்தல் நடத்தப்படுகிறது.

இதேவேளை, மொஸ்கோ மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ரஷ்ய கூட்டமைப்புக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் தனது x கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில், இவ்வாறான கோழைத்தனமான வன்முறைச் செயல்கள் அமைதியை சீர்குலைத்து அச்சத்தை விதைப்பதாகவே தெரிவித்துள்ளார்.

எனவே பயங்கரவாதத்திற்கு எமது உலகில் இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் இரங்கல் தெரிவித்து இந்நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்பாக மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்