இலங்கை

ஈரானில் 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் பாதிப்பு!

ஈரானில் வீசும் மோசமான மணல் புயல் காரணமாக கடந்த 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தென்கிழக்கில் Sistan, Baluchestan ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மணல் புயலால் இதயத்திலும் கண்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

மணல் புயலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு 6,000க்கும் அதிகமான முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும்நாள்களில் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் புயல் இன்னும் மோசமடையலாம்.

ஈரானில் வருடந்தோறும் மே மாத இறுதியிலிருந்து செப்டம்பர் மாதக் கடைசி வரை மோசமான மணல் புயல் வீசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content