ஆப்பிரிக்கா

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70இற்கும் மேற்பட்டோர் பலி!

மாலியில் கடந்த வார இறுதியில் கட்டுப்பாடற்ற தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே, தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் விவரங்களை உறுதிசெய்து, இது ஒரு விபத்து என்று கூறினார்.

குறித்த சுரங்கத்தில் 100 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் 3-வது தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய சுரங்க விபத்துகள் இடம்பெறுவது சகஜமாகும்.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!