இந்தியா

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதி

ராஜஸ்தானில் குல்பி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் குல்பி விற்று வந்தார். அப்போது, குல்பி வாங்கி சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதில், 15 குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து நேற்று மருத்துவமனை சிகிச்சை முடிந்து 15 மாணவர்களும் வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், குல்பியின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!