இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஒரே வருடத்தில் நாட்டை விட்டு வெளியேறிய 300,000ற்கும் அதிகமான இலங்கையர்கள்

இலங்கையில் இருந்து இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 300,000ற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்ட தரவுகளுக்கு அமைய 300,162 இலங்கையர்கள் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காகச் சென்றுள்ளனர்.

அவர்களில் 177, 804 ஆண்களும், 122, 358 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றவர்களில் பெரும்பாலானோர் குவைத்துக்கு சென்றுள்ளனர்.

அதன்படி, 73,995 பேர் குவைத்துக்கும், 49,499 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும், 7,002 பேர் தென் கொரியாவுக்கும் சென்றுள்ளனர்.

அத்துடன் 9,211 பேர் இஸ்ரேலுக்கும், 10,274 பேர் ருமேனியாவுக்கும் 8,251 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் சுமார் 311,000 பேர் தொழில் வாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!