நாட்டை விட்டு வெளியேறிய 3 லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள்
2024 ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சத்து 14ஆயிரம் இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த ஆண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக அதன் பொது மேலாளர், டி.டி.பி. சேனநாயக்க கூறினார்.
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடிய தொழிலாளர்களில், மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்கள் தொழில்முறை வேலைகளுக்குச் சென்றனர்.
அந்தக் குழுவின் எண்ணிக்கை நூற்றுக்கு 65 சதவீதமாகும்.
கடந்த ஆண்டில் 35% மக்கள் குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது மேலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





