ஆசியா செய்தி

நேபாளத்தில் போராட்டத்தின் போது தப்பியோடிய கைதிகளில் 3000ற்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது

நேபாளத்தில் அரசுக்கு எதிராக கடந்த 8ம் திகதி முதல் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையின்போது சிறைகளில் இருந்து 14000 மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.

அந்த வகையில் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய பொலிஸார், ராணுவத்தினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற 3723 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

மேலும் 10320 கைதிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதால் இந்திய அதிகாரிகளின் உதவியுடன் எஞ்சிய கைதிகளை கைது செய்யவும் நேபாள பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி