வட அமெரிக்கா

அமெரிக்காவின் தென்பகுதியில் புயல் காரணமாக 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் தென்பகுதியில் புயல் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) 3,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதுமட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் தாமதமடைந்தன.

அட்லாண்டா அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ஐந்து ஓடுபாதைகளும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்ததாக டெல்டா ஏர்லைன்ஸ் கூறியது.

அட்லாண்டாவில் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையிலிருந்து புறப்பட இருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கடைசி நேரத்தில் அதன் பயணத்தை ரத்து செய்தது.

அந்த விமானத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகள், சிப்பந்திகள் அவசரகால சறுக்கு மிதவைகள் மூலம் வெளியேறினர்.

டெக்சஸ், வடகெரோலைனா ஆகிய மாநிலங்களும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டன.

அம்மாநிலங்களில் 1,200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்