ஐரோப்பா

ரோமில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயம்

இத்தாலி தலைநகர் ரோமில் பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அப்பகுதிக்கு போலீசார், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். ஏரிவாயு கசிவை நிறுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, திடீரென பெட்ரோல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார், தீயணைப்புப்படையினர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!