இலங்கை

கடந்த 10 மாதங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கடந்த 10 மாதங்களில் 1,638 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 1,733 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகளவிலானோர் பாதசாரதிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “இறந்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 1,733 பேரில் 540 பேர் பாதசாரிகள். மேலும், 543 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இறந்துள்ளனர்.

எனவே, இவ்வாறு சாலையில் பயணிக்கும் இந்த அப்பாவி மக்கள் மீது கவனம் செலுத்துமாறு சாரதிகளை கேட்டுக்கொள்கிறோம். பாதசாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எனவே, பாதசாரிகளாகிய நீங்கள் சாலையில் செல்லும்போது கவனமாக இருங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content