கென்ட் பகுதியில் மாணவர்களுக்கு மெனிஞ்சைடிஸ் பி தடுப்பூசி வழங்கப்படுகிறது
கென்ட் (Kent) பகுதியில் மூளைக்காய்ச்சல் பரவலில் ஆறு புதிய பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மெனிஞ்சைடிஸ் பி (meningitis B) தடுப்பூசி வழங்கப்படுகிறது.
சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இந்த நோயின் “வேகமான பரவல்” முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆக உள்ளது எனக் கூறினார்.
இலக்கு வைத்து நடத்தப்பட்ட தடுப்பூசித் திட்டத்தில் இதுவரை சுமார் 1,500 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை ஏன் சிலர் இதில் சேர்க்கப்படவில்லை என கேள்விகளும் எழுந்துள்ளன.
உறுதிசெய்யப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்பட்ட பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 27 ஆகும். இதில் சுமார் 15 பேருக்கு ஆய்வகப் பரிசோதனைகளில் மெனிஞ்சைடிஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
கென்ட் பகுதியில் உள்ள நான்கு பாடசாலைகள், இரண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் லண்டனில் உள்ள ஒரு உயர்கல்வி நிறுவனமும் பாதிப்புகளுடன் தொடர்புடையன.
இந்த சம்பவங்கள் கேன்டர்பரியில் உள்ள ‘கிளப் கெமிஸ்ட்ரி’ (Club Chemistry) இரவு விடுதியுடன் தொடர்புடையவை.





