இலங்கை

இலங்கை: ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ. 3,000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒக்டோபர் மாத இடைக்கால கொடுப்பனவு ஏன் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான தொகையை அடுத்த வாரத்திற்குள் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இடைக்காலக் கொடுப்பனவான 3,000 ரூபாய் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்

ஒக்டோபர் மாத ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால கொடுப்பனவை ஒரு வாரத்திற்குள் தனித்தனியாக வரவு வைக்குமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி, அடுத்த மாதம் முதல் மாதாந்திர ஓய்வூதியத்துடன் அதனை உள்ளடக்குவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

(Visited 27 times, 27 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content