பிரித்தானியாவை தாக்கும் அசுரப்புயல் : சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பிரித்தானியாவை தாக்கும் மோசமான புயல்கள் குறித்து முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வாரத்தில் வெப்பமான வானிலை முடிவுக்கு வரும் எனவும் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் MET OFFICE அறிவித்துள்ளது.
அத்துடன் மோசமான வானிலை புயலாக மாறும் எனவும் இவை பல இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள், தெற்கு மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு சனிக்கிழமை இரண்டு மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை முன்னறிவிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கையால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நியூகேஸில், கிளாஸ்கோ, எடின்பர்க் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகியவை அடங்கும். வானிலை அலுவலக எச்சரிக்கை சனிக்கிழமை மாலை 6 மணி வரை அமலில் உள்ளது.