ஆசியா

வங்கதேசத்தில் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ; இதுவரை 59 பே்ர் பலி!

வங்காளதேசத்தில் 2 வாரங்களாக பெய்து வரும் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. மின் விநியோகம் பாதிப்பு, சாலை இணைப்பு துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில், சிக்கி 59 பேர் வரை பலியாகி உள்ளார்கள். இதில் அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளனர். 14 பேரும் உயிரிழந்து உள்ளனர். 11 மாவட்டங்களில் உள்ள நகராட்சி பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் 54 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

40 லட்சம் பேர் வரை 3,900க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், போதிய தூய்மையான குடிநீர் கிடைக்காத சூழலில், தொற்று நோய் பரவ கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

(Visited 49 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!