ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குடியேறிய இலங்கையர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள்

ஜெர்மனியில் குடியேறிய வெளிநாட்டவர்களின் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் இவ்வாறு குடியேறியுள்ளனர். ஜெர்மன் புள்ளி விபர திணைக்களம் ஜெர்மனிக்குள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் தொடர்பான புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்பொழுது ஜெர்மனியில் மொத்தமாக 15.6 மில்லியன் மக்கள் புலன் பெயர்ந்த பின்னணியை கொண்டவர்களாக புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டில் குடியேறியவர்களில் 2.5 மில்லியன் மக்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

ஜெர்மனிய நாட்டில் குடியேறியவர்களில் ஆண்களை விட கூடுதலாக பெண்களே காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியர்களின் சராசரி வயதானது 37 வயதாக இருக்கும் பொழுது குடியேறியவர்களின் சராசரி வயது மிகவும் குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஜெர்மனியில் குடியேறியவர்களில் 12 சதவீதமானவர்கள் போலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 9 சதவீதமாக காணப்படுவதாகவும், ரஷ்யாவில் இருந்து குடியேறியவர்கள் ஜெர்மன் நாட்டில் மொத்தமானவர்களின் தொகையில் 7 சதவீதமாக காணப்படுவதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content