ஜெர்மனியில் புகலிடம் கோரியுள்ள லட்ச கணக்கான மக்கள்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/07/c857fe32-ca76-4e28-8bf7-744be5d5cade-jpg.webp)
ஜெர்மனி நாட்டில் 2022 ஆம் ஆண்டு 2.4 லட்சம் மக்கள் புகலிடக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பல நாடுகள் மொத்தமாக 1 மில்லியன் மக்கள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது ஐரோப்பாவினுடைய அகதிகளுக்கான முகாம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 லட்சத்து 96 ஆயிரம் பேர் இவ்வாறு 27 நாடுகளில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த அதிகளின் எண்ணிக்கையானது 50 சதவீதம் உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த அகதிகளில் பெருமபாலானவர்கள் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஜெர்மனியில் மட்டும் 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும்,
பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்தில் 56 ஆயிரம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும்,
ஸ்பானிய நாட்டில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும்,
ஒஸ்ரியாவில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும், இத்தாலி நாட்டில் 84 ஆயிரம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும் தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக சிரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த அகதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை பாரிய அளவு உயர்வாக உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.