செய்தி

பைபர்ஜாய் வரும் 170000 பேர் இடம்பெயர்வு

இந்தியா மற்றும் பாகிஸ்தானை நோக்கி வீசும் பைபர்ஜாய் புயல் காரணமாக இரு நாடுகளிலும் உள்ள 170,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கூட இந்தியாவின் வடமேற்கு கடலோர பகுதிகளிலும், பாகிஸ்தானின் தெற்கு கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான புயலாக இது இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், ஏராளமான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடையலாம் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புப் படையினரும், கடலோரக் காவல்படையினரும் மீட்புப் பணிகளுக்காக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வங்காள மொழியில் “பைபர்ஜாய்” என்றால் “பேரழிவு” என்று பொருள்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!