மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கை நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் Sajith Premadasa கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03) ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் உரையாற்றுகையிலேயே Sajith Premadasa ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம்.
இதற்கான அழைப்பை கட்சி பேதமின்றி அனைத்து தரப்புகளுக்கும் ஜனாதிபதி விடுக்க வேண்டும். ஏனெனில் எமக்கும் இந்த நாடுமீது பற்று உள்ளது எனவும் Sajith Premadasa கூறினார்.




