ஐரோப்பா செய்தி

சிறுவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட அதிகாரி பணிநீக்கம்

பிரித்தானியாவின் மெர்சிசைட் (Merseyside) காவல்துறை அதிகாரி ஜான் ரிக்பி (John Rigby), 17 வயது சிறுவன் ஒருவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2025 பெப்ரவரி மாதம் முதல் அந்தச் சிறுவன் மைனர் என்று தெரிந்தே இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காகக் காவல்துறை கணினியில் தரவுகளைத் திருடிய குற்றச்சாட்டும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரியே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழைக்கப்பட்ட அவமானம்’ எனத் தலைமை காவல்துறை அதிகாரி ராப் கார்டன் (Rob Carden) தெரிவித்துள்ளார்.

தற்போது சிறையிலுள்ள இவருக்கு வரும் ஜனவரி 16-ஆம் திகதி தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!