இலங்கை

நாடாளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கும் வைத்திய அதிகாரிகள்!

நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றும் (11.09) நாளையும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் தாமதம் செய்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்க சங்கத்தின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் சுகாதார அமைப்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது சங்கம் யோசனை முன்வைத்துள்ள போதிலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிடத்தக்க பதில் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இந்த விடயங்களை முன்வைத்து இன்றும், நாளையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்