இலங்கை

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வீட்டுத் தொகுதிகள் இன்று (19.12) அதிகாலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பேருவளை, பயாகல, அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கட்டுகுருந்த பயிற்சி முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர்.

பேருவில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்படும் மற்றும் திரும்பும் பெருந்தொகையான படகுகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!