செய்தி

இலங்கையில் அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் – பாதுகாப்பில் 10 ஆயிரம் பொலிஸார்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுகிறது.

இதை முன்னிட்டு, நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல மே தின கொண்டாட்டங்கள் மற்றும் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளன.

இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினத்திற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படும் மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.

அவற்றில் 14 கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் கொழும்பில் தமது மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்ளவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், அதன் மே தின கூட்டம் பி.டி. சிறிசேன மைதானத்திற்கு எதிரே புதிய பிரதீபா மாவத்தை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்த ஆண்டு மே தின பேரணியை நடத்தாத நிலையில், பொரளை கெம்பல் மைதானத்தில் தனது கட்சியின் மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகள் ஊடாக மே தின பேரணியை நடத்தவுள்ளதுடன், கீழ் சத்தம் வீதி பகுதியில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி இவ்வருடம் லிப்டன் சுற்றுவட்டத்தில் தனது மே தின கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஹெவ்லொக் வீதியில் இருந்து ஆரம்பிக்கும் கட்சியின் பேரணி தும்முல்லையை கடந்து கன்னங்கர மாவத்தை ஊடாக குறித்த இடத்தை சென்றடையவுள்ளது.

கொழும்பில் மே தினக் கொண்டாட்டங்களுடன் யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மே தினக் கொண்டாட்டங்களை கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் கம்பஹாவில் நடைபெறவுள்ளது.

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content