ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

இத்தாலியில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு அறிக்கை இதனை வெளியிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் பிரிவை சேர்ந்தவர்கள் என்றால், அதிகம் 60 வயதோருக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இருப்பார்கள். பொதுவாக 100 வயதைக் கடந்தவர்கள் இப்போது குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலியில் இப்போது அவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருப்பதாக இத்தாலியின் அறிக்கை கூறுகிறது.

இத்தாலியின் தேசிய புள்ளிவிவரப் பிரிவு நேற்று வெளியிட்ட இந்த அறிக்கையில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 100 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை அங்கு 30 சதவிகிதம் அதிகரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் 100 வயதுக்கும் 104 வயதுக்கும் இடைப்பட்ட இத்தாலியர்களின் எண்ணிக்கை 22,000க்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!