ஐரோப்பா

ஜெர்மனியில் பொது மக்களின் உதவி பணத்தில் பாரிய மோசடி!

ஜெர்மனியில் சமூக உதவிப் பணம் வழங்கும் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரேமன் நகரத்தில் உள்ள சமூக உதவி திணைக்களத்தில் பணியாற்றும் இருவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக உதவிப் பணம் பெறாத சுமார் 30 பேரின் தகவல்களை பயன்படுத்தி பெருந்தொகை யூரோவை பெற்றுள்ளனர்.

மாதாந்தம் ஒரு நபர் 11000 யூரோவை தனது வங்கி கணக்கில் வைப்பு செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சமூக உதவி பணத்தில் 418000 யூரோ மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரிந்து வாழுகின்ற குடும்பங்களுக்கு சமூக உதவி திணைக்களத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலியான முறையில் நபர்களின் பெயர்களை பதிவு செய்து சமூக உதவி பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. சந்தேக நபர்களின் வீடு மற்றும் அலுவலகம் சோதணையிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சந்தேக நபர்களின் பெயரில் வேறு குற்ற செயல்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்