பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க்

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக அமெரிக்க செனட் சபையினால் கூட்டப்பட்ட குழுவிற்கு நேற்று வந்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தவிர, ஐந்து முன்னணி சமூக ஊடக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
4 மணி நேரத்திற்கும் மேலான விளக்கக்காட்சிகளில், சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
(Visited 20 times, 1 visits today)