இலங்கையில் பல ரயில் சேவைகள் இரத்து!

ரயில் சாரதிகள் நேற்று (23.07) முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 11 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டார்.
அதன்படி பிரதான பாதையில் 05 புகையிரதங்களும், புத்தளம் பாதையில் ஒரு புகையிரதமும், வடக்கு புகையிரத பாதையில் மற்றுமொரு புகையிரதமும் இரத்து செய்யப்படுவதாக இண்டிபொலகே மேலும் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)