இந்தியா செய்தி

நாளை காலை பல அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படும் அல்லது தாமதமாகும்

புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (04) பிற்பகல் இயக்கப்படவிருந்த அனைத்து அலுவலக புகையிரதங்களும் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புயைிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சுகயீன விடுப்பு அறிவித்ததே இதற்கு காரணம்.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் திட்டமிடப்பட்ட பல பயணங்கள் இரத்துச்செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புகையிரத சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை (5) காலை சில அலுவலக புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாக புறப்படலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு சிகரெட் தொடர்பான தகராறே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி