மன்னார் சிறுமி கொலை விவகாரம் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை!

தலைமன்னாரம் வடக்கில் உயிரிழந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17.02) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு மன்னார் நீதவான் இன்று அனுமதி வழங்கியிருந்தார்.
தலைமன்னாராம வடக்கு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அண்மையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், இது தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர், அப்பகுதியில் உள்ள தென்னை நிலத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
(Visited 32 times, 1 visits today)