பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மன்னாரில் 3 நாள் சிகிச்சை
டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மன்னாரில் நாளை முதல் மூன்று நாள் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை தொடங்குவதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத் தலைவர் டொக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கால்நடைகளைப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வேளாண்மை, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை (DAPH) மற்றும் அரசு கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது
மன்னாரின் பல கிராமங்களுக்கு எட்டு கால்நடை மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு பாதிக்கப்பட்ட பண்ணைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்கள் விலங்குகளை கொண்டு வர ஊக்குவிக்கப்படுவார்கள், என்றும் டொக்டர் குமார கூறினார்.
மேலும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெள்ளத்தால் மேய்ச்சல் நிலங்கள் சேதமடைந்ததால், 250 மெட்ரிக் தொன் கால்நடை தீவனம் மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது மாவட்டத்தில் உருவான தீவன நெருக்கடியை சமாளிக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




