இலங்கை

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பணிப்புரை!

தகுதிவாய்ந்த பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம்  மருந்து விநியோகத்தில் தற்போதுள்ள ஏகபோகத்துக்குப் பதிலாக போட்டியை உருவாக்கி, மருந்து தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ வழங்கல் பிரிவுக்கு சொந்தமான உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை ஒரு வருடத்திற்கு போதுமானதாக பேணுவதற்கான கொள்கையொன்றை தயாரிக்குமாறும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்