ஆன்மிகம் இலங்கை

மண்டைதீவு சிறுப்புலம் ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவில் அலங்கார உற்சவம்

இலங்கைத் திருநாட்டின் வடக்கில் இயற்கை அழகும் வளமும் நிறைந்த மண்டைதீவு சிறுப்புலம் ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் அலங்கார உற்சவம் கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாக தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று 11ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறையாக மண்டைதீவு ஶ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் அலங்காரத்திருவழா நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் இவ்வாலயம் இடிபாடுகளுக்குள்ளாகி இருந்தது. பின்னர் 2023ஆம் ஆண்டு ஆலயத்தை புதுப்பித்து இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக இடம்பெற்றது.

இதையடுத்து முதன்முறையாக அலங்காரத்திருவிழா இடம்பெற்றது. புதிய தேரில் வலம் வந்து முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 19ஆ திகதி (19/7/2024) வெள்ளோட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து 20ஆம் திகதி (20/7/2024) தேர்த்திருவிழா இனிதே நடைபெற்றது.

 

 

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!