ஆசியா

ஏமாற்று வேலைக்காக விரல்களில் காந்தங்களைப் பொருத்திய நபர் – 40 ஆண்டுகளுக்குப் பின் செய்த செயல்

தாய்லந்தைச் சேர்ந்த ஒருவர் தமது விரல்களில் காந்தங்களைப் பொருத்தியள்ளார்.

அவர் 40 வருடங்களுக்கு அதனை கையில் வைத்திருந்ததாக மருத்துவர் Wat Lun தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான Hi-Lo பகடை விளையாட்டில் வெற்றிபெற அவர் காந்தங்களைப் பொருத்தியதாக தெரியவந்துள்ளது.

விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பிய அந்த நபர் விமான நிலையப் பாதுகாப்பில் தமது விரல்களில் உள்ள காந்தங்கள் கண்டறியப்பட்டால் சமிக்ஞை ஒலிக்கும் என்று பயந்தார்.

அதனால் மருத்துவரிடம் அதை அகற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதைப் பற்றி வாட் லூன் தமது Facebook பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.

அந்த நபரின் இடது கையின் நடு, மோதிர விரல்களை வெட்டியபோது அதில் 2 காந்தங்கள் இருந்ததைக் கண்டதாகக் கூறினார் அவர்.

வாட் லூனின் பதிவு 3000க்கும் அதிகமான முறை இணையத்தில் பகிரப்பட்டது.

விளையாட்டில் ஏமாற்றிய ஆடவரைப் பலர் கண்டித்தாலும் அவரின் முயற்சியைப் பாராட்டியவர்களும் உண்டு.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!