இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞன் மரணம் – விசாரணையில் வெளிவந்த தகவல்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம், நாகூர் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார். தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பல்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பணத்தைப் பெற்று வேலை வாய்ப்பு தேடி கத்தார் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காததால் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், கடனாகப் பெற்ற பணத்தை மீளத் தர முடியாததால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 54 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!