ஆசியா

மலேசியாவில் பூனையைத் துன்புறுத்திய நபர்… தகவல் தெரிவிப்பவருக்கு வெகுமதி

பூனையின் தோலை உரித்து அதை ஒருவர் துன்புறுத்துவது போன்ற காணொளியையும் புகைப்படங்களையும் மலேசிய விலங்குகள் நலச்சங்கம் ஜூன் 24ஆம் திகதி ஃபேஸ்புக்கில் வெளியிட்டது.

இந்தக் காணொளியில் பூனையைத் துன்புறுத்தும் நபர் குறித்துத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3,000 ரிங்கிட் (S$863) வெகுமதி அளிக்கப்படும் என்றும் அந்தத் தகவலைப் பயன்படுத்தி அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என்றும் அந்தப் பதிவில் அச்சங்கம் தெரிவித்தது.

ஆடவர் ஒருவர் மலாய் மொழியில் பேசிக்கொண்டே கத்தியைப் பயன்படுத்திப் பூனையின் தோலை உரிக்கும் காட்சியை அந்தக் காணொளியில் காண முடிந்தது.

அந்த ஆடவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிலாங்கூர் வட்டாரத்தில் இருக்கும் சிற்றுண்டி கடை ஒன்றில் வேலைப்பார்ப்பதாகவும் நம்பப்படுவதாக மலேசிய விலங்குகள் நலச்சங்கம் கூறியது.

அந்தப் பூனையை அவர் துன்புறுத்திய காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஊடக நோக்கங்களுக்காக அந்த நபர் வேண்டுமென்றே பூனையைத் துன்புறுத்தியது தெரியவந்தால், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அச்சங்கம் கூறியது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content