உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம், குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் முராத்நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போக்சோ சட்டத்தின் சிறப்பு நீதிபதி நீரஜ் கௌதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக முராத்நகரைச் சேர்ந்த அக்பருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.
ஜூலை 5, 2022 அன்று பாதிக்கப்பட்டவரின் தாய் வேலைக்காக அலிகாருக்குச் சென்றுள்ளார், தந்தை பணியில் இருந்துள்ளார்.
அவ்வேளையில் 17 வயது சிறுமி தனது வருங்கால கணவருடன் கோவிலுக்குச் சென்ற பிறகு, ஒரு திருமண வீட்டிற்கு அருகில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு நடந்து செல்லும்போது, அக்பர் அவளை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், சிறுமி மயக்கத்தில் இருந்தபோது அக்பர் ஒரு வீடியோவையும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
சுயநினைவு திரும்பிய பிறகு பாதிக்கப்பட்டவர் தனது தாயைத் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். பின்னர் தாயார் வழக்கு பதிவு செய்துள்ளார்.