நியூயார்க்கில் ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி மனைவியைக் கொன்ற நபர்

நியூயார்க்கைச் சேர்ந்த ஒருவர், தனக்கு ஆண் குழந்தை பிறக்காதோ என்ற வருத்தத்தில் தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்று, இரண்டு இளம் மகள்களைக் குத்தியதாக குற்றவாளியின் தந்தை தெரிவித்துள்ளார்.
33 வயதான ட்ரூ கார்னியர், தனது 29 வயது மனைவி சமந்தாவை நியூயார்க்கின் வீட்டில் வைத்து, தனது மூன்றாவது மகளுக்கு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் 2024 இல் நடந்தது.
குடும்பத்தின் மேசன்வில்லே வீட்டிற்குள் நடந்த படுகொலையின் போது, கார்னியர் தனது மகள்களான இஸி, 6, மற்றும் அடெலினா, 9, ஆகியோரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார்.
சந்தாவின் 30வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. டிஏ அலுவலகத்தின்படி, குழந்தைகள் பலத்த காயமடைந்தனர், மேலும் சமந்தாவும் அவர்களின் பிறக்காத குழந்தையும் தாக்குதலின் காரணமாக உயிரிழந்துள்ளது.