ஆசியா

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவரைக் கத்தியால் குத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவரைக் கத்தியால் குத்திய 67 வயது நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பூசான் நகருக்குச் சென்றிருந்த லீ ஜே மியூங் தாக்கப்பட்டார்.

நபர் ஒருவர் லீயின் பெயரைக் கொண்ட காகித மகுடத்தை அணிந்துகொண்டு அவரை அணுகி கையெழுத்து கேட்டதையும் பிறகு அவர் மீது பாய்ந்து கத்தியால் குத்தியதையும் காணொளிப் பதிவுகள் காட்டின.

தாக்குதலுக்குத் தென்கொரிய அதிபர் யூன் சூக் யோலும் மற்ற அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.அது ஜனநாயகப் பிரதிநிதி ஒருவரை அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று பூசான் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்தது.

லீ மீண்டும் ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லீயின் கட்சி பல தொகுதிகளைக் கைப்பற்றியது. இது அதிபர் யூன்னுக்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் பின்னடைவாக அமைந்தது.இருப்பினும், லீயின் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியது.

(Visited 58 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!