ஐரோப்பா

லண்டனின் Big Ben கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

லண்டனின் பிக் பேன் கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கீழே இறங்கியவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு நாள் முழுதும் அந்தக் கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார்.

நேற்று லண்டன் பொலிஸாருக்கு சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அவசர மீட்புப்பணி அதிகாரிகள் சொல்லியும் அந்த நபர் தொடர்ந்து கோபுரத்தின்மேல் அமர்ந்திருந்தார்.

“நான் சொந்தமாகக் கீழே வருவேன்” என அந்த நபர் கூறியிருந்தார். அவரைக் கீழே இறங்க வைக்க அதிகாரிகள் அவருடைய உடல்நிலையைக் காரணமாகக் காட்டினர்.

காலணி அணியாமல் இருந்ததால் அவருடைய பாதத்தில் ரத்தம் கசிந்ததாகவும் அவர் அணிந்திருந்த ஆடை அவரைக் குளிரிலிருந்து பாதுகாக்கப் போதாது என்றும் அதிகாரிகள் கூறினர்.

அந்த இடத்தில் கூட்டம் கூடியது. பாலஸ்தீனை விடுவியுங்கள் என்று அவர்கள் கத்தினர். கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த நபருக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!