செய்தி

இலங்கையில் கோடரியால் தாக்கிய நபர் – கணவனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த மனைவி

கந்தளை, அக்போபுர, 84, பிரதேசத்தில் அயல் வீட்டில் வசிப்பவர் தம்பதி மீது கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஷிரோமலா பெர்னாண்டோ என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த கணவர் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த அயல் வீட்டு அடிக்கடி மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து கடுமையாக வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

தகாத வார்த்தை பேச வேண்டாம் என பாதிக்கப்பட்ட கூறியதால், ஆத்திரமடைந்த அவர், கோடரியால் தாக்கியுள்ளார்.

கணவரை கோடரியால் தாக்குவதைத் தடுக்க ஷிரோமலா இடையில் புகுந்ததாகவும் கோடரி அவரது மார்புப் பகுதியில் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content