இலங்கை

இலங்கை: இரண்டு T-56 ஆயுதங்களுடன் ஒருவர் கைது

அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு T-56 ரக துப்பாக்கிகளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இரண்டு T-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மகசீன்கள், 60 தோட்டாக்கள், ஒரு ஜோடி தொலைநோக்கி மற்றும் வாள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!