இலங்கை

இலங்கை வந்த பெண் சுற்றுலா பயணியிடம் பிறப்புறுப்பை காட்டி அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் கைது!

இலங்கை வந்த நியூசிலாந்து சுற்றுலா பயணியிடம் பாலியல் சைகைகளை காண்பித்து அநாகரிகமாக நடந்துகொண்ட  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் அறுகம்குடாவை சுற்றிப்பார்க்க வந்த நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணியிடம் தனது பிறப்புறுப்பை காட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையே குறித்த நியூசிலாந்து பெண் இது தொடர்பான தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  கல்முனை, மருதமுனை பகுதியில் திருக்கோவில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் குழு இன்று (16) நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் , அவரது மனைவியும் திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மனைவியின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், சந்தேக நபர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றதைக் கண்டுபிடித்தனர்.

அதன்படி,  சந்தேக நபர் இன்று மதியம் கல்முனை,  மருதமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அப்போது, ​​அவர் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!