இந்தியா

உத்திரப் பிரதேசத்தில் நொறுக்குத்தீனியில் கஞ்சா கலந்து விற்றவர் கைது

உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னோவில் உள்ள தெருவோரக் கடையில் நொறுக்குத்தீனிகளில் கஞ்சா கலந்து விற்ற குற்றத்திற்காக மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மோகன்லால் கஞ்ச் புறநகர்ப் பகுதியில் 42 வயது பிரமோத் சாஹு என்பவர் உருளைக்கிழங்கு வறுவல், பொறித்த முட்டைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தார்.

அவற்றிற்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், நொறுக்குத்தீனிகளில் போதைப்பொருளான கஞ்சாவைத் தடவி அவர் விற்றது அம்பலமானது. அதுமட்டுமன்றி, கஞ்சாவை அம்மூவரும் பொட்டலங்களாகவும் விற்று வந்ததாகக் கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த லக்னோ காவல்துறையினர் சாஹுவை கைது செய்தனர்.

இதேபோன்று, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம், பள்ளி, கல்லூரி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே