இலங்கை செய்தி

மட்டக்களப்பில் தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய நபர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு, கிரண் பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அகற்றப்பட்ட அறிவிப்புப் பலகைகள் வாழைச்சேனை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் தலைமறைவாகியுள்ளார்.

தொல்பொருள் துறை நவம்பர் 3ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசை மற்றும் தகவல் பலகைகளை அமைக்கத் தொடங்கியது.

அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22ம் திகதி அகற்றப்பட்டன.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!