இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் கைது – பையில் சிக்கிய பொருட்கள்

இலங்கைக்கு 365 மீன்கள் மற்றும் ஆமைகளை விற்பனைக்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த அவர் தனது பயணப் பையில் மீன்கள் மற்றும் ஆமைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மீன்கள் மற்றும் ஆமைகளை தனது நண்பருக்கு கொடுப்பதற்காக தீவிற்கு கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!