இலங்கை

மாம்புல்கொட – புத்தக விற்பனை நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் படுகாயம்

புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மாம்புல்கொட பிரதேசத்தில் இயங்கிவரும் புத்தக விற்பனை நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தகக் கடையின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்தபோது, ​​திடீரென வந்த இனந்தெரியாத நபர் அவர் மறைத்து வைத்திருந்த வாள் போன்ற கூரிய ஆயுதத்தை எடுத்து கடையின் உரிமையாளரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை சமரசம் செய்த அயலவர், கூரிய ஆயுதம் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கடையின் உரிமையாளர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!