ஆசியா

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மலேசியாவில் உடல்பருமன் பிரச்சினையைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திறக்கும் நேரத்தைக் குறைக்கும்படி பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நள்ளிரவு 12 மணியோடு கடையை மூடும்படி பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரவில் சாப்பிடுவதால் உடல்பருமன், தூக்கமின்மை, செரிமானச் சிக்கல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுவதாக பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெய்தீன் அப்துல் காதர் கூறினார்.

24 மணி நேரமும் கடைதிறக்கும் உரிமத்தை அதிகாரிகள் இரத்துச் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் உடல்எடை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐந்தாண்டு முன்பு நடத்தப்பட்ட தேசியச் சுகாதார ஆய்வு கூறியது.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!