ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மலேசியர்; 54வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் பணிபுரிந்துகொண்டிருந்த 29 வயது மலேசிய மருந்தாளர், மனச்சிதைவு நோயால் (schizophrenia) பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் நபரால் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

லியோங் கம் சுவான் 2021ஆம் ஆண்டிலிருந்து பொதுச் சுகாதார சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்ததாகவும் அக்டோபர் 23ஆம் திகதி காலை 11.30 மணிவாக்கில் தமது வீட்டில் உயிரிழந்து கிடந்ததாகவும் ஆஸ்திரேலியாவின் ‘7நியூஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

லியோங் வேலைக்குச் செல்லாததைத் தொடர்ந்து, அவரைத் தேடச் சென்ற அவரது சக ஊழியர் அவரை உயிரிழந்த நிலையில் கண்டார்.

சம்பவம் தொடர்பில், வீடற்ற நிலையில் இருக்கும் 54 வயது நபர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது. மறுநாள் நீதிமன்றத்தில் அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சைமன் ஹண்ட்டர் என்று அடையாளம் காணப்பட்ட அந்தச் சந்தேகப் பேர்வழி, மெல்பர்ன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.

தமது கட்சிக்காரர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் இரண்டு வாரங்களுக்கு அதற்கான மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் வழக்கறிஞர் ஜார்ஜியா கார்வெலா நீதிமன்றத்தில் கூறினார்.

See also  இனப்படுகொலை செய்ததாக பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராகக் குரலெழுப்பிய ஆஸ்திரேலிய MP

இந்நிலையில், லியோங்கின் முதலாளியான ‘ஈஸ்டர்ன் ஹெல்த்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட் பிளங்கட், லியோங் அவரது தாராளமயமான குணத்திற்கு என்றும் நினைவில் இருப்பார் என்று கூறினார்.

ஹண்ட்டர், அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content