செய்தி பொழுதுபோக்கு

ஹைதராபாத் விமான நிலையத்தில் மலையாள நடிகர் விநாயகன் கைது

மலையாள நடிகர் விநாயகன் ஹைதராபாத் விமானநிலைய கேட் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் பேரில், RGI விமான நிலைய போலீஸாரால் நகர காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் விநாயகன் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

கொச்சியிலிருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்குப் பறந்துகொண்டிருந்த நடிகர் விநாயகன், விமான நிறுவனத்தின் கேட் ஊழியர்களிடம் தகராறு செய்து அநாகரீகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது, அதன் பிறகு விநாயகன் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையிடம்(CISF) ஒப்படைக்கப்பட்டார்.

CISF அளித்த புகாரின் பேரில் விநாயகன் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கொச்சியைச் சேர்ந்த விநாயகன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்ததற்காக பரவலாகப் பாராட்டப்பட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!