அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் தாய் வீடு திரும்பும் மைத்திரி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவது மிகவும் நல்லது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பக்கம் இருந்த விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

“ கட்சி தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை மீளப்பெற்று இணைவது நல்லது.

எனக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. அவை முடிவடைந்த பின்னரே நான் முடிவொன்றை எடுப்பேன். விஜயதாச ராஜபக்ச எனக்கு அறிவித்துவிட்டே சென்றார்.

தலைமைப் பதவிக்கு வருபவர் பற்றி தெரிந்த பின்னரே கட்சியுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தாய்வீடு. அக்கட்சியில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

2015 இல் நடைபெற்ற தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கினார். வெற்றிபெற்ற பின்பு கட்சியைக் கைப்பற்றி தலைவராகவும் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!