அரசியல் இலங்கை செய்தி

ராஜபக்ச ஆட்சிக்கு ‘இராஜதந்திர தலையிடி’ கொடுத்த தூதுவரை சந்தித்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக செயல்படும் ஜுலி சங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார்.

தனது இராஜதந்திர பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளை கொழும்பில் நடத்தி வருகின்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அவர் இன்று பேச்சு நடத்தினார்.

“ அமெரிக்க-இலங்கை கூட்டாண்மை குறித்து விவாதித்தோம்.” என்று அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது (அறகலய) ஜுலி சங்தான் அமெரிக்க தூதுவராக செயல்பட்டார்.

அப்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபகச் பிரதமராகவும் பதவி வகித்தனர்.

அறகலயவின் பின்னணியில் அமெரிக்க தூதுவரும் இருந்தார் என மஹிந்தவின் சகாக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் சர்வதேச களத்தில் அமெரிக்கா கடும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தது.

மறுபுறத்தில் பஸில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு அமெரிக்க குடியுரிமை இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்க குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ச துறந்தார் என்பது தெரிந்ததே.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!